அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்திற்கு ’தீயவர் குலைகள் நடுங்க’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கியது.
இப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதையாக உருவெடுத்துள்ளது. கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் வகையில் அழுத்தமான பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ், இந்தப் படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் அர்ஜூன் இன்வெஸ்டிகேடிவ் ஆபீஸராக நடிக்கிறார். இப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவம் தரும் த்ரில்லர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருள் மழையில் குடையுடன் அர்ஜுன் நிற்க,பைபிளை கையில் வைத்துக்கொண்டு மிரட்டல் பார்வையுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ‘தீயவர் குலைகளை நடுங்க வைக்கும்’ விதமாக அமைந்துள்ளது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ராம்குமார் சிவாஜிகணேசன், GK.ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை, GS ARTS சார்பில் தயாரிப்பாளர் G.அருள் குமார் தயாரிக்கிறார். பரத் ஆசிவகன் இசை அமைக்கிறார். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.