சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு தற்காலிகமாக ‘தலைவர் 169‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘எந்திரன்‘ படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த் ஜோடியாக ‘தலைவர் 169‘ படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் பச்சனை அணுகியதாக செய்திகள் வெளியாகின. தற்போது, ’டாக்டர்’ பட நடிகை பிரியங்கா மோகனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து பணியாற்றியவர் நடிகை பிரியங்கா மோகன். தலைவர் 169ல் சூப்பர் ஸ்டாரின் மகளாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் கூறுகின்றன. இந்த நடிகை சமீபத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்‘ திரைப்படம் வெளியான பிறகு, இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் படகுழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
By Hari