நடிகை டாப்ஸி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமான படத்தை நடிகை நயன்தாரா கைப்பற்றியுள்ளார்.
என்றென்றும் புன்னகை, வாமனன், மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் அஹமது. இவர் ஜெயம் ரவி நடிப்பில் ஜன கண மன திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். இதில் டாப்ஸி ஹீரோயினாக நடிக்க தேர்வாகி இருந்தார். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக படப்பிடிப்பு தொடங்கவில்லை.
இந்நிலையில் தற்போது இப்படத்தினை துவங்க அஹமது முடிவு செய்துள்ளார். ஜெயம் ரவி கால் ஷீட் கொடுத்து விட்டார். அதே சமயம், டாப்ஸிக்கு பதில் இப்படத்தில் நயன்தாரா நடிப்பார் என படக்குழு அறிவித்துள்ளது.
படத்தில் இருந்து திடீரென தன்னை நீக்கியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார் டாப்ஸி.
By:Hari