இயக்குனர் பாலாவுடன் சூர்யா மூன்றாவது முறையாக மீண்டும் இணையவுள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. ’பிதாமகன்‘ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பாலசுப்ரமணியம் அவர்கள்,தற்போது சூர்யா-பாலா படத்திற்கும் ஒளிப்பதிவு செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளன. பாலாவுடன் சூர்யா தனது படத்திற்கான பணிகளை விரைவில் தொடங்கவுள்ளார். மேலும் தயாரிப்பாளர்கள் குழுவை உருவாக்கி வருகின்றனர். பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தில், கதாநாயகியாக ‘உப்பென்னா‘ திரைப்படத்தின் பிரபலம் க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களின் 2D என்டர்டைன்மெண்ட்.
பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் விரைவில் தொடங்கும் என்பதால் சுவாரஸ்யமான பல செய்திகளை எதிர்பார்க்கலாம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாவுடன் சூர்யா இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா பல வேடங்களில் நடித்து வெளிவந்த படங்களில்,இது ஏழாவது படமாக இருக்கும்.
By: Hari