வெயில் காலத்தில் சருமம் கருப்படைவது இயல்பானது. அதனை போக்க சில டிப்ஸ் பார்க்கலாம் வாங்க.
1. வெள்ளரிக்காய், வேப்பம் பூ, கற்றாழை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வரவும்.
2. திராட்சையை அரைத்து வடிகட்டி, மீதமுள்ள சக்கையை மசித்து முகத்தில் ஒரு மாஸ்க் போல பூசி, சிறிது நேரத்திற்கு பின் தூய்மையான நீரில் கழுவ வேண்டும்.
3. ஆரஞ்சு பழ தோலை காயவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் முல்தானிமட்டி மற்றும் சந்தனத்தை ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்திற்கு தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
4. இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 2 ஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாக மாறிவிடும்.
5. பச்சை பயறு, கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு சேர்த்து இரண்டையும் நன்கு அரைத்து பவுடர் ஆக்கிக்கொள்ளுங்கள். 2 ஸ்பூன் அரைத்த பவுடர், 2 ஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். முகத்தில் தடவி அரை மணி நேரத்திற்கு பிறகு தூய்மையான நீரில் கழுவ வேண்டும். (குறிப்பு: கஸ்தூரி மஞ்சளின் அளவு அதிகமானால் முகத்தில் எரியும் தன்மை ஏற்படும்.)
6. தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தவும்.
By: Hari