கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் பகுதி தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் உள்ள செடிகள், மரங்கள் காய்ந்துள்ளன. மேலும், கடந்த 2 நாட்களாக மயிலாடு பாறை உள்ளிட்ட சில இடங்களில் தோகை வரை காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் பல அரிய வகை செடிகள் மற்றும் மரங்கள் அழிந்துள்ளன. மச்சூர் மலைத்தொடர் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ள நிலையில், ஒருபுறம் காற்றின் வேகம் காரணமாக அவ்வப்போது தீ பரவுவது அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
விழிப்புணர்வு வீடியோ
இதனால், வனத்துறையினர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காட்டுத் தீயை விரைவில் அணைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். வனத்துறையினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நடிகர் கார்த்தி பேசிய விழிப்புணர்வு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விழாவில் கார்த்தி பேசுகையில், “கோடை காலத்தில் நமக்கு நிவாரணம் அளிக்க இயற்கை அளித்த வரம் கொடைக்கானல். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது ஒரு கனவு தலமாகும். இது பல தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாகும். இருப்பினும், எச்சரிக்கை தேவை. இங்குள்ள காடுகள் தற்போது எளிதில் தீப்பிடித்துக்கொள்ளும் நிலையில் உள்ளன. ஒரு சிறிய தீப்பொறி கூட தீயை மூட்ட போதுமானது. தீ விபத்து ஏற்பட்டால், காடுகளுடன், அதிலுள்ள பறவைகள் மற்றும் விலங்குகளும் அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது.
எனவே, அனைவரும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். காட்டுத் தீக்கு எதிரான இந்த போராட்டத்தில் தீயணைப்புத் துறையுடன் இணைந்து நிற்போம்” என்று கூறினார்.
கொடைக்கானல் காட்டுத் தீ – நடிகர் கார்த்தியின் விழிப்புணர்வு வீடியோ. | Actor Karthi | Forest Fire