மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி, இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி, ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. அதையடுத்து மூன்றாவது போட்டியாக இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சாதனை படைத்துள்ளார். இது அவர் விளையாடும் 6வது உலகக்கோப்பை தொடராகும். இதற்கு முன்னர் இந்த சாதனையை இந்தியாவின் சச்சினும் டெண்டுல்கரும், பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டட் ஆகிய இருவர் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர். பேட்டிங்கில் விளாசிய வீராங்கனைகள்: டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அவருடன் பின் வரிசையில் இறங்கிய ஹர்மன்ப்ரீத் சிங் கவுர் அதிரடியாக விளையாட, இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். ஸ்மிருதி 129 ரன்களும்…
Author: Diya
இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பேவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக மாறியுள்ளது. இப்படத்திற்கு கௌன் பிரவீன் தாம்பே என தலைப்பிட்டுள்ளனர். இதனை ஜெயபிரத் தேசாய் இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 1ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் OTT தளத்தில் வெளியாகும். இதில் பிரவீன் தாம்பேவாக ஸ்ரேயாஸ் தல்படே நடித்துள்ளார். மேலும் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்ப்ரதா சாட்டர்ஜி, அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரேயாஸ் தல்படே கூறுகையில் “இக்பால் படத்தில் ஹீரோவாக நடித்து 17 வருடங்கள் கழித்து பெரிய திரையில் பிரவீன் தாம்பேவாக நடித்ததை நினைத்து பெருமைகொள்கிறேன். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக அவருடன் இணைந்து பழகியதை என்னால் எப்போதும் மறக்க முடியாது” என்றார். By: Hari DisneyPlus Hotstar Multiplex Kaun Pravin Tambe | Official Trailer | 1st April | DisneyPlus Hotstar https://www.youtube.com/watch?v=BKlYYBbtKcA
ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் இந்தியவுக்கு 11தங்கம், 7 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஸ்பெயின் விக்டோரியா நகரத்தில் மார்ச் 1ம் தேதி தொடங்கிய இப்போட்டி மார்ச் 6ல் நிறைவடைந்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக, டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான ப்ரமோத் பகத் 3 தங்க பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மற்றொரு இந்தியரான கிருஷ்ணா நாகரும் இதில் தங்கம் வென்றார். இவர்கள் தவிர மானசி ஜோஷி, சுகந்த் கடம், மனீஷா ராமதாஸ், நித்யஸ்ரீ, நிதேஷ் குமார், சந்தியா, தினகரன், சிவராஜன், ருத்திக் மற்றும் பலர் பதக்கம் வென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு என பல பிரிவுகளில் விளையாடி ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Great performance by India para shuttlers at the First BWF International event of 2022 Team…
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. டாஸ் இந்தியாவுக்குச் சாதகமாக பிறகு பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்தனர், தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா, ஸ்னே ராணா மற்றும் பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் அரை சதங்களை விளாசி தங்கள் அணி ஆரம்பத் தள்ளாட்டத்திலிருந்து மீண்டு, பே ஓவல் மைதானத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தனர். 245 என்ற தந்திரமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, 43 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, 50 ஓவர் வடிவத்தில் அண்டை நாடான இந்தியாவுக்கு எதிராக தனது 11வது தொடர்ச்சியான ஆட்டத்தை இழந்தது
PAK vs AUS முதல் டெஸ்ட் 3வது நாள் சிறப்பம்சங்கள்: உஸ்மான் கவாஜா தனது முதல் டெஸ்டில் சதம் அடிக்க 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தார். 114 பந்துகளில் சஜித் கான் 68 ரன்களுடன் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் இடையேயான தொடக்க நிலை 156 ரன்களில் முடிந்தது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே மூன்றாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர், மோசமான வெளிச்சம் காரணமாக நடுவர்கள் வீரர்களை முன்கூட்டியே வெளியேற்றினர். ஸ்மித் 69 ரன்களிலும், ஸ்மித் 24 ரன்களிலும் ஸ்டம்ப்ஸ் அழைக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை(06.03.2022) மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 122 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. முதல் இன்னிங்சில் 174 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்களை மட்டுமே இலங்கை அணியால் எடுக்க முடிந்தது. இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கட்டுகள் கைப்பற்றினர். அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு, டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் இரண்டாவது வீரர் என்ற சாதனையை அஷ்வின் முறியடித்தார். முன்னதாக, இலங்கையை இந்தியா ஃபாலோ-ஆன் செய்ய, ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியா 400 ரன்கள் முன்னிலை பெற்றது. நிஸ்ஸங்க தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார் ஆனால் மறுமுனையில் இலங்கை தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. 4 விக்கெட்டுக்கு 108 ரன்கள் என்ற ஓவர்நைட் ஸ்கோரில் இருந்து இலங்கை மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கியது. முன்னதாக, ஜடேஜா 175 ரன்கள் எடுத்திருந்த மாரத்தான் ஆட்டத்தில் இந்திய அணி தனது…
ஆஸ்திரேலிய சுழல் பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே மரணம். 52 வயதான ஷேன் வார்னே தாய்லாந்தில் இருக்கும் தன் வீட்டில் எந்த சுயநினைவும் இல்லாமல் இருக்கவே குடும்பத்தினர் மருத்துவ உதவியை நாடியிருக்கிறார்கள். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், அவரை மீட்க முடியவில்லை. மாரடைப்பால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சுழற்பந்து என்றதும் நம் நினைவுக்கு வருபவர்களில் முக்கியமானவர் ஷேன் வார்னே. ஆஸ்திரேலியாவுக்காக 145 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 708 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். சர்வதேச அளவில் 1001 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடங்கிய காலத்தில் ராஜஸ்தான் ராயலஸ் அணியை வழிநடத்தி முதல் தொடரிலேயே கோப்பையையும் வெல்ல வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல பிரபலங்கள் ஷேன் வார்னேவின் திடீர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சேவக், “உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான ஷேன் இனி இல்லை என்பதை நம்பமுடியவில்லை” என ட்விட் செய்திருக்கிறார்.…