Author: Hari Rajesh

தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அதனை தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தார்கள். அதிலிருந்து காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அவர்கள் மறுக்கவில்லை. ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி, அவர்களின் காதலை உறுதிப்படுத்தியது. மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார் ஆதி. மேலும் ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read More

ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற நெட்ஃபிக்ஸ் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் ஆலியா பட். சர்வதேச ஸ்பை த்ரில்லரில் கேல் கடோட் மற்றும் ஜேமி டோர்னனுடன் இணைகிறார். ஆலியா பட் இப்போது ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்!

Read More

ஜேம்ஸ் – கன்னட மொழி ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம். சேத்தன் குமார் எழுதி இயக்கியுள்ளார். கிஷோர் பதிகொண்டா தயாரித்துள்ளார். புனித் ராஜ்குமார் மற்றும் பிரியா ஆனந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது 29 அக்டோபர் 2021 அன்று புனித் இறந்ததை தொடர்ந்து, அவரது மரணத்திற்குப் பின் வெளியாகும் திரைப்படம். ராஜகுமாரா(2017) படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக புனித், ப்ரியா ஆனந்த் மற்றும் சரத்குமார் கூட்டணியில், இந்த படம் அமைந்துள்ளது. படத்தின் இசை மற்றும் ஒலிப்பதிவு சரண் ராஜ். ஒளிப்பதிவு சுவாமி.ஜே.கவுடா. இப்படம் 17 மார்ச் 2022, புனித் ராஜ்குனாரின் பிறந்த நாளன்று திரையரங்குகளில் ஹிந்தி, மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கில் உள்ள டப்பிங் பதிப்புகளுடன் முதல் நாளில் 4000 திரைகளில் வெளியிடப்பட்டது. பெங்களூரு நகரம் பாதாள உலக மாஃபியாவால் நிரம்பியுள்ளது மற்றும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. விஜய் கெய்க்வாட் (ஸ்ரீகாந்த்) அக்குழுவின் தலைவனாக செயல் படுகிறார். அவருக்கு உயிர் பயம் உள்ளது. அதனால், சந்தோஷை (புனீத் ராஜ்குமார்)…

Read More

பிரபல இசையமைப்பாளறும் பாடகருமான டி. இம்மான் மோனிகா ரிச்சர்ட் என்பவரை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2மகள்கள் உள்ளனர். இந்நிலையில் , கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது தனது மறுமணம் குறித்து இம்மான் விளக்கம் அளித்துள்ளார். “எனக்கு மனைவியாக வருபவர், என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். என் வருங்கால மனைவி சிங்கிள் மதராக இருக்க வேண்டும். அவரது குழந்தைக்கு நான் நல்ல தந்தையாக இருப்பேன். பெண் பாருங்கள். இதுவரை திருமணம் ஆகாத பெண்ணை பார்க்க வேண்டாம். விதவை அல்லது விவாகரத்து ஆன பெண், குறிப்பாக 7 அல்லது 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பவராக பாருங்கள் என்று வீட்டில் சொல்லி இருக்கிறேன். தற்போது என் மகள்களுக்கு 9வயதும், 11வயதும் ஆகிறது. அவர்களுக்கு ஒரு தங்கை கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

Read More

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரெட் சில்லிஸ் என்ற பெயரில் சொந்தமாக பட நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் தனது நடிப்பில் உருவாகும் படங்களை தயாரிக்கிறார். அதே சமயம் மற்ற நடிகர்களை வைத்தும் படங்களை தயாரிக்கிறார். சமீபத்தில் பாபி தியோல் நடிப்பில் லவ் ஹாஸ்டல் என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் சொந்தமாக ஓடிடி (OTT) நிறுவனத்தை தொடங்குகிறார் ஷாருக்கான். இதற்கு எஸ்.ஆர்.கே பிளஸ் என பெயரிட்டுள்ளார். இயக்குனரான அனுராக் கஷ்யப் இதில் பார்ட்னராக சேர்ந்துள்ளார். இந்த தகவல் அறிந்து சல்மான் கான், ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read More

கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் பகுதி தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் உள்ள செடிகள், மரங்கள் காய்ந்துள்ளன. மேலும், கடந்த 2 நாட்களாக மயிலாடு பாறை உள்ளிட்ட சில இடங்களில் தோகை வரை காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் பல அரிய வகை செடிகள் மற்றும் மரங்கள் அழிந்துள்ளன. மச்சூர் மலைத்தொடர் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ள நிலையில், ஒருபுறம் காற்றின் வேகம் காரணமாக அவ்வப்போது தீ பரவுவது அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. விழிப்புணர்வு வீடியோ இதனால், வனத்துறையினர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காட்டுத் தீயை விரைவில் அணைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். வனத்துறையினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.…

Read More

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவன் ஆகியோர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் மார்ச் 25ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையிடப்படவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பட குழுவினர், துபாயிலுள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்திற்கு செல்ல உள்ளனர். இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒலிவியா மோரிஸ் நடித்துள்ளார். இவர் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் இதுவரை பங்கேற்கவில்லை. ஆனால் துபாயில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம். காஷ்மீரில் 1990களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையால் பண்டிட்கள் அங்கிருந்து உயிர் பயத்துடன் வெளியேறியதை சித்தரிக்கும் இப்படம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பற்றி கருத்து தெரிவிக்க்காமல், அமைதி காத்து வரும் ஹிந்தி திரையுலகினரை விமர்சித்துள்ளார் நடிகை கங்கனா. இது குறித்து கங்கனா கூறியிருப்பதாவது: “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படம் பற்றி திரையுலகில் நிலவும் அமைதியை கவனியுங்கள். இதன் கதை மட்டுமல்ல, வியாபாரமும் முன்மாதிரியாக இருக்கிறது. இந்த வருடத்தில் மிகவும் வெற்றிகரமான, லாபகரமான படமாக இது இருக்கும். பல கட்டுக்கதைகளையும் முன் முடிவுகளையும் உடைத்து இந்த படம், ரசிகர்களை திரையரங்கிற்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் காலை 6மணி காட்சிகள் கூட நிரம்பி வழிகிறது. இது நம்ப முடியாதது என்று அவர் கூறியுள்ளார். திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள இப்படத்தின் வசூல் விவரங்களை டேக் செய்துள்ள…

Read More

நடிகர் கார்த்திக், நடிகை ராகினி தம்பதியரின் மூத்த மகன் கவுதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கத்தில் ரிலீசான கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலன் ஹீரோயினாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் ‘தேவராட்டம்’ படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அப்போது தொடங்கியது காதல். இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள், வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். கடந்த 11ம் தேதி மஞ்சிமா மோகனின் பிறந்த நாளையொட்டி இன்ஸ்டாவில் வாழ்த்திய கவுதம் கார்த்திக், “பிறந்தநாள் வாழ்த்துகள் மோமோ. உன்னை போன்ற ஒரு வலிமையான பெண் என் வாழ்க்கையில் இணைவதை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். நீ எப்போதும் சந்தோஷமாக இருக்க என் அன்பான வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். By: Hari

Read More