உள்குத்து திரைப்படத்தின் பிரீமியர், உலகத்தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 20ம் தேதி, ஞாயிற்று கிழமையன்று மாலை 5.00 மணிக்கு, ஒளிபரப்பாகிறது. உள்ளூர் தாதா ஒருவரோடு, மோத வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் ஒரு சாமான்ய மனிதனின் வாழ்க்கை பயணத்தை இக்கதை சித்தரிக்கிறது. கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷ் மற்றும் நடிகை நந்திதா ஸ்வேதா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உள்குத்து திரைப்படம் பொழுதுபோக்கு அம்சத்துடன், ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்குகின்ற உணர்வை விவரிக்கின்றது. இது குறித்து இயக்குனர் கார்த்திக் ராஜு கூறியதாவது: “இத்திரைப்பட உருவாக்கத்திற்காக நாங்கள் எடுத்த சிறப்பான முயற்சிகளை கருத்தில் கொள்ளும்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதன் ப்ரீமியர் ஒளிபரப்பாவது எனக்கு மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது. மிக அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை எனது திரைப்படம் இதன் மூலம் சென்றடைவது உறுதி. பழிவாங்கல் மற்றும் நகைச்சுவை என்ற இரண்டு வெவ்வேறு அம்சங்களை இத்திரைப்படம் நேர்த்தியாக ஒருங்கிணைக்கிறது. இது எளிதானதாக இருக்கவில்லையென்றாலும், இப்புதிருக்கான அனைத்துப் பகுதிகளும் மிக சரியாக பொருந்தியது குறித்து…
Author: Cini360
விஜய்யின் வரவிருக்கும் #Beast படத்தின் தயாரிப்பாளர்கள் அதன் முதல் தனிப்பாடலான ‘அரபு குத்து’வை வெளியிட்டனர், மற்றொரு பெப்பி டிராக்கை படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார். Jolly O Gymkhana – Official Lyric Video | Beast | Thalapathy Vijay | Sun Pictures | Nelson | Anirudh https://www.youtube.com/watch?v=jmwU1iAC-IE
நடிகர் அருண் விஜய், தனது மாமா மற்றும் இயக்குனரான ஹரியுடன் இணைந்து, “யானை” படத்தின் முழு வேலைகளையும் முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், விரைவில் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிடவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. நடிகர் அருண் விஜய் இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஹரி தனது வழக்கமான பரபரப்பான திரைக்கதையில் கிராமம் மற்றும் நகர்ப்புற பின்னணியில் படத்தை இயக்கியுள்ளார். தற்போது இப்படம் குறித்த அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டுள்ளது. யானை படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை KKR சினிமாஸ் வாங்கியுள்ளது. Zee குழுமம் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளது. இப்படம் வரும் நாட்களில் ZEE5 OTT & ZEE தமிழ்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம், நல்ல வசூலும் பெற்றுள்ளது. இப்படம் குறித்து சிலர் எதிர்மறையாக பேசி வருகிறார்கள். இதற்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் அஜித் குமார் ஆகஸ்டு 5,2021 அன்று வெளியிட்ட கருத்தை நினைவுபடுத்தி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில் “ரசிகர்கள், வெறுப்பாளர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரு நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களின் வெறுப்பையும், நடுநிலையாளர்களின் சார்பற்ற நிலைப்பாட்டையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். வாழு, வாழ விடு. இது சம்மந்தப்பட்டவர்களுக்கான ஒரு நினைவூட்டல். என்றும் நிபந்தனையில்லா அன்புடன் அஜித் குமார்.” என்று கூறியுள்ளார். https://twitter.com/SureshChandraa/status/1503216384699867136
ஒளிப்பதிவாளரும், இயக்குனரும், நடிகருமான தங்கர் பச்சன் இயக்கியுள்ள திரைப்படம் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’. இது ஒரு நகைச்சுவையான திரில்லர் திரைப்படம். இதில் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜார்ஜ் டயஸ் தயாரிக்கிறார். இது PSN என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் தயாரிக்கப்படுகிறது. இப்படத்தில் விஜித் பச்சன், முனிஷ்காந்த், மிலானா நாகராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஸ்வினி சந்திரசேகர், ஸ்டண்ட் ஸ்லைவா, மன்சூர் அலிகான் மற்றும் யோகிராம் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தரன் குமார் இசையமைக்கிறார். பிரபு தயாளன் மற்றும் சிவா பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். படத்தொகுப்பு சபு ஜோசப். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தங்கர் பச்சன் பேசியதாவது: “ஒருவனிடம் பணம் நிறைய இருக்கிறது ஆனால் நிம்மதி இல்லை. இன்னொருவனிடம் பணம் கையில் இல்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கதை. என் மகன் விஜித் என் இயக்க்கத்தில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தான். இல்லையென்றால் 6 ஆண்டுகளுக்கு முன்பே நடிக்க வைத்திருப்பேன். பல இயக்குனரிடம் கதை கேட்டான். சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. அதில் சில…
மம்முட்டி – ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ புதிய படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மலையாள சினிமாவின் இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. அவர் இயக்கிய ஜல்லிக்கட்டு திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. லிஜோ ஜோஸ் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் “நண்பகல் நேரத்து மயக்கம்” என்னும் புதிய படத்தை இயக்குகிறார். மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுதியுள்ளார். கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வேளாங்கன்னியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி, ஒரே கட்டமாக பழனியில் நடந்து முடிந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. By Hari Nanpakal Nerathu Mayakkam Official Teaser | Mammootty | Lijo Jose Pellissery | Mammootty…
KGF 2018 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான கன்னட பிளாக்பஸ்டர் திரைப்படமாகும். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். பின்பு, பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் முதல் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த படம் நாடு முழுவதும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இரண்டாம் பாகத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெளியீட்டை படக்குழு முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது KGF-2 ஏப்ரல் 14, 2022 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இந்தியா முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏப்ரல் 14 ஆம் தேதி KGF2 வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் தற்போது ஒரு சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் இடம்பெறும் TOOFAN பாடலின் லிரிக்கல் வீடியோ மார்ச் 21ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில்…
வலிமை படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 61வது படத்தின் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அஜித்குமார், தற்போது தனது 62வது படத்தை உறுதி செய்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஒரு படத்திற்காக கைகோர்க்கிறார், இதற்கு தற்காலிகமாக AK62 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்னேஷ் சிவனின் பிளாக்பஸ்டர் ஜோடியாக நயன்தாரா கதாநாயகியாகவும், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், LYCA Productions அதிகாரப்பூர்வமாக Ak62 ஐ அறிவித்தது. அஜித்தின் ‘வலிமை’ படத்தில் விக்னேஷ் சிவன் பிளாக்பஸ்டர் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடலின் வரிகளை எழுதினார், அது ஒரு சார்ட்பஸ்டர் ஹிட் ஆனது. இதற்கிடையில், அஜித்தின் 61வது படம் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் உள்ளது மற்றும் தயாரிப்பு குழு விரைவில் AK61 வெளியீட்டு தேதியை அறிவிக்கும். தற்காலிகமாக ஏகே61 என்று பெயரிடப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’க்குப் பிறகு மூவருக்கும் இடையிலான மூன்றாவது படம் ஏகே61. விக்னேஷ் சிவன் தற்போது தனது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், இது ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். By: Divya
ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ஆக்சன் ஹீரோயினாக மாறியுள்ளார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா ஒரு நடிகையாக, மாடலாக மற்றும் பாடகியாக தனது சினிமா வாழ்க்கையில் தனக்கென்று ஒரு புதிய தடம் பதித்தவர். இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ மற்றும் சுந்தர் சி யின் ‘அரண்மனை 3’ படத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ், ஜான்மேக்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் கா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா உடன் ரெட், வேட்டைக்காரன் படங்களில் நடித்த சலீம் கவுஸ், கமலேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி அறிமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ளார். சுந்தர் சி பாபு இசையமைத்துள்ளார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு – எலிசா. அந்தமான், மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. 2018ம் ஆண்டு துவங்கிய இந்த படம் 4 ஆண்டுகள் படமாக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின்…
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கத்திற்கு திரும்பியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒரு பாடல் வீடியோவை இயக்கியுள்ளார். இது தொடர்பான அப்டேட்களை ஐஸ்வர்யா தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில், அப்பாடல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா, படப்பிடிப்பு மற்றும் ரிலீசுக்கு நடுவே, குணமடைந்து வீடு திரும்பி, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து பாடல் எழுதுவதில் ஈடுபட்டார். தமிழில் ‘பயணி’ என்றும், தெலுங்கில் ‘சஞ்சாரி’ என்றும், மலையாளத்தில் ‘யாத்ரக்காரன்’ என்றும் இந்தப் பாடலுக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலை நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து ரஜினி கூறுகையில், என் மகள் 9 ஆண்டுகளுக்கு பின் இயக்கியுள்ள பயணி ஆல்பத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. அவர் எப்போதும் சிறப்பாக இருக்க விரும்புகிறேன். கடவுள் ஆசீர்வதிப்பார். லவ் யூ என கூறியுள்ளார். முன்னதாக துல்கர் சல்மான், எஸ்.ஜே.சூர்யா, சிரஞ்சீவி, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பல பிரபலங்களும் ஐஸ்வர்யா…