இந்தி திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ராஷ்மிக சம்மதித்துள்ளார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி புகழ் பெற்றவர் சமந்தா. தற்போது சமந்தா பாணியில் ராஷ்மிகாவும் ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதித்துள்ளார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இப்போது அனிமல் என்ற ஹிந்தி படத்தை இயக்குகிறார். இந்த படத்திலுள்ள ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாட நடகை ராஷ்மிகா சம்மதம் தெரிவித்துள்ளார். இதில் பாபி தியோல், ரன்பிர் கபூர், பிரணிதி சோப்ரா, அனில் கபூர் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஹிந்தியில் மிஷன் மஜ்னு, குட்பை ஆகிய திரைப்படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. By: Hari
Author: Cini360
இயக்குனர் பாலாவுடன் சூர்யா மூன்றாவது முறையாக மீண்டும் இணையவுள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. ’பிதாமகன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பாலசுப்ரமணியம் அவர்கள்,தற்போது சூர்யா-பாலா படத்திற்கும் ஒளிப்பதிவு செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளன. பாலாவுடன் சூர்யா தனது படத்திற்கான பணிகளை விரைவில் தொடங்கவுள்ளார். மேலும் தயாரிப்பாளர்கள் குழுவை உருவாக்கி வருகின்றனர். பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தில், கதாநாயகியாக ‘உப்பென்னா’ திரைப்படத்தின் பிரபலம் க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களின் 2D என்டர்டைன்மெண்ட். பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் விரைவில் தொடங்கும் என்பதால் சுவாரஸ்யமான பல செய்திகளை எதிர்பார்க்கலாம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாவுடன் சூர்யா இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா பல வேடங்களில் நடித்து வெளிவந்த படங்களில்,இது ஏழாவது படமாக இருக்கும். By: Hari
தமிழில் விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தவர் நடிகர் நாக சைதன்யா. அதன் பிறகு நேரடி தமிழ் திரைப்படத்தில் நடிக்கவில்லை. நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு, தமிழில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் வரலாற்றுப் பின்னனி கொண்ட கதையில் நாக சைதன்யா நடிக்க இருப்பதாகவும், நடிகை பூஜா ஹெக்டே இவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. By: Hari
முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் பலர் உள்ளனர். முகப்பருக்கள் சருமத்தின் பொலிவைக் கெடுக்கும். முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பது, உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது, சருமத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றை இயற்கையான முறையில் கையாளுவது எப்படி என்பதை காணலாம். 1. இரவு தூங்கும் முன் எலுமிச்சை சாற்றை சிறிது நீரில் கலந்து, பருக்கள் மீது தடவி மறுநாள் காலையில் தூய நீரில் கழுவ வேண்டும். இது பருக்களில் உள்ள பஸ்ஸை நீக்கி அதில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல உதவும். 2. கிரீன் டீ தயாரித்து, ஐஸ் கியூப்பில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கி, பின் அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், அவை விரைவில் பருக்களை மறையச் செய்யும். இதில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாப்பதோடு, முக பொலிவையும் தரும்.…
9 பாடல்கள் மூலம் Youtube’ல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதில் நடிகர் விஜய் முதலிடத்தில் உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் புதிய சாதனையை படைக்க உள்ளது. இப்பாடல் 16கோடி பார்வையாளர்களை நெருங்குகிறது. தென்னிந்திய சினிமா பாடல்களில் இது புதிய சாதனை. இதன் மூலம் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஹீரோ என்ற பெருமை விஜய்க்கு கிடைத்துள்ளது. வாத்தி கம்மிங்(மாஸ்டர்) & வாத்தி கம்மிங் பாடல் வரிகள் மட்டும்(மாஸ்டர்) ஆள போறான் தமிழன் (மெர்சல்) வெறித்தனம்(பிகில்) என் ஜீவன்(தெறி) ஈனா மீனா டீக்கா(தெறி) செல்ப்பி புள்ள(கத்தி) ஒரு குட்டி ஸ்டோரி(மாஸ்டர்) ஆகிய பாடல்களும் யூ ட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. By: Hari
தென்னிந்தியாவில் உருவாகும் படங்களை பான் இந்தியா படமாக வெளியிடுவது தான் தற்போதைய ட்ரெண்டிங். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைக்கிறது. தமிழ் , தெலுகு, ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் தான் பெரும்பாலான படங்கள் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரேயா நடிக்கும் கப்ஸா (Kabza) திரைப்படம் அந்த 5 மொழிகளையும் தாண்டி மராத்தி, ஓடியாவிலும் வெளியிட உள்ளனர். மொத்தத்தில் 7 மொழிகளில் வெளியாகயுள்ளது. இப்படத்தில் ஸ்ரேயா, கன்னட நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப் நடிக்கிறார்கள். எழுத்து மற்றும் இயக்கம் ஆர்.சந்துரு.
வெயில் காலத்தில் சருமம் கருப்படைவது இயல்பானது. அதனை போக்க சில டிப்ஸ் பார்க்கலாம் வாங்க. 1. வெள்ளரிக்காய், வேப்பம் பூ, கற்றாழை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வரவும். 2. திராட்சையை அரைத்து வடிகட்டி, மீதமுள்ள சக்கையை மசித்து முகத்தில் ஒரு மாஸ்க் போல பூசி, சிறிது நேரத்திற்கு பின் தூய்மையான நீரில் கழுவ வேண்டும். 3. ஆரஞ்சு பழ தோலை காயவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் முல்தானிமட்டி மற்றும் சந்தனத்தை ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்திற்கு தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். 4. இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 2 ஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாக மாறிவிடும். 5. பச்சை பயறு, கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு சேர்த்து இரண்டையும்…
கமர்ஷியல் ஆக்ஷன் படமான சூர்யாவின் ET (Etharkkum Thunindhavan) நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. OTT பிரீமியர் அம்சத்தைப் பற்றிய ஒரு பார்வை. ET இன் திரையரங்க டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை Sun NXT வாங்கியது, சாட்டிலைட் உரிமையை சன் டிவி (ஜெமினி) பெற்றுள்ளது. சன் வழக்கமாக OTT பிரீமியர்களுக்கு முன்னதாக தொலைக்காட்சியை ஒளிபரப்புகிறது, எனவே ET இன் OTT வெளியீட்டில் தாமதம் ஏற்படலாம். இந்த ஏப்ரலில் OTT இல் ET திரையிடப்படலாம் என்று கூறப்படுகிறது, ஆனால் இது தொடர்பாக உறுதியான அறிவிப்பு எதுவும் இல்லை. SunNXT டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை Netflix அல்லது பிற சிறந்த தளங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக அறியப்படுகிறது, எனவே சன் என்எக்ஸ்டியைத் தவிர வேறு ஏதேனும் OTT பார்ட்னர் ETக்கு கிடைக்குமா என்று நாம் காத்திருந்து பார்க்க வேண்டும். By: Saravana
பீக்கி ப்ளைண்டர்ஸின் ஆறாவது மற்றும் இறுதி சீசன் கிட்டத்தட்ட வந்துவிட்டது. பல ரசிகர்களுக்கு இடைவிடாத தாமதமாகத் தோன்றிய பிறகு, நிகழ்ச்சி கடந்த மாதம் UK ஒளிபரப்பிற்குத் திரும்பியது. இப்போது அது நெட்ஃபிளிக்ஸ்-க்கு திரும்பியுள்ளது. ஜூன் 10 ஆம் தேதி தனது ஸ்ட்ரீமிங் சேவை என்று நிகழ்ச்சியின் இறுதியில் நெட்ஃப்ளிக்ஸ் கூறியுள்ளது. சீசன் 6 கடைசியாக இருக்கும். ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், ஜனவரியில் நிகழ்ச்சியை உருவாக்கியவர் ஸ்டீவன் நைட், சீசன் 6 பீக்கி பிளைண்டர்களுக்கான இறுதி சீசனாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். ஆறாவது சீசனுடன் தொடரை முடிப்பதற்குப் பதிலாக, பாஃப்டா வென்ற நாடகம் “வேறொரு வடிவத்தில்” தொடரும் என்று நைட் கூறினார். “கோவிட் எங்கள் திட்டங்களை மாற்றியது. ஆனால் பீக்கியை ஒரு திரைப்படத்துடன் முடிக்க வேண்டும் என்பது தொடக்கத்தில் இருந்தே எனது திட்டம் என்று என்னால் கூற முடியும்,” என்று அவர் தெரிவித்தார். “அதுதான் நடக்கப் போகிறது.” 2018 இல், நைட் அவர்கள் ஏழாவது சீசனை செய்ய விரும்புவதாக ரசிகர்களிடம் கூறியிருந்தார்.…
நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் இயக்குனர் செல்வராகவன். இப்படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கி, முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பிகில்’ மற்றும் ‘மாகமுனி’ புகழ், நடிகை இந்துஜா ரவிச்சந்தர் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘ காதல் கொண்டேன், புதுப்பேட்டை, துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன போன்ற படங்களுக்குப் பிறகு செல்வராகவன் மற்றும் தனுஷ் மீண்டும் இணையும் படம் நானே வருவேன். By: Hari