போனிகபூர் தயாரிப்பில் RJ பாலாஜி நடிக்கும் ரீமேக் படத்திற்கு ‘வீட்ல விசேஷம்’ என பெயரிடப்பட்டுள்ளது. ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோவில் சினிமா விமர்சனங்கள் மூலம் பிரபலமானவர். இவருக்கு பல ரசிகர்கள் உண்டு. காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ ( ‘Badhaai Ho’) படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பது மட்டுமல்ல, இந்த திரைப்படத்தின் இயக்குனரும் இவர்தான். இந்த பதாய் கோ திரைப்படம் இந்தியில் 220கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம். தேசியவிருதையும் வென்றுள்ளது. இந்த ரீமேக் படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சத்யராஜ், ஊர்வசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் யோகி பாபு ஆர்.ஜே.பாலாஜியுடன் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படம் ஜூன் 17,2022 அன்று வெளியாக உள்ளது. ஊர்வசிக்கு வளைகாப்பு நடத்துவது போன்ற புகைப்படத்துடன் போஸ்டர் வெளியாகி…
Author: Cini360
டோலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மேட்டினி என்டர்டெயின்மென்ட் வழங்கும் திரைப்படம் மிஷன் இம்பாசிபிள். இதில் டாப்ஸி பண்ணு நாயகியாக நடிக்கிறார். ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா புகழ் ஸ்வரூப் ஆர்எஸ்ஜே இந்த படத்தை இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இப்படத்தின் டிரைலரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். டிரெய்லர் உண்மையில் படத்தின் கதைக்களத்தை பற்றிய நுண்ணறிவை நமக்கு வழங்குகிறது. புலனாய்வுப் பத்திரிக்கையாளரான டாப்ஸியிடம் இருந்து இது ஒரு தீவிரமான குறிப்பில் தொடங்குகிறது. ஒரு பணியை மேற்கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று அவளும் அவளுடைய குழுவும் உணரும்போது, இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் கிரிமினல் தாவூத் இப்ராகிமைப் பிடிக்க முயற்சிக்கும் மூன்று குழந்தைகளின் உதவியை பெறுகிறார்கள். அவர்கள் குறுகிய காலத்தில் பணக்காரர்களாக மாறுகிறார்கள். எதுவும் சாத்தியம் என்று அவர்கள் உணர்கிறார்கள். டாப்ஸியும் அவர்களின் தைரியத்தால் வியப்படைகிறார். அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, ஒரு பணியை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது. ஒரு நம்பமுடியாத உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு,…
காதல் தோல்வி, அதனால் ஏற்படும் வலி. உணர்வுப்பூர்வமான மற்றும் வித்தியாசமான கதையை கருவாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் முகமறியான். இது குறித்து படத்தின் இயக்குனர் சாய் மோரா கூறியதாவது. ”முகமறியான் திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி.திலீப் குமார் மிகவும் சவாலாக எடுத்து தயாரித்துள்ளார். அவரே வில்லனாகவும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். கொரோனா காலகட்டங்களில் பல நெருக்கடிகளை சந்தித்து ஆந்திரா வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். மிகவும் பழமையான கட்டிடங்கள் , திகில் நிறைந்த பகுதிகளிலும், பல வருடங்கள் ஆட்கள் நடமாட்டமில்லாத இடங்களிலும், படப்பிடிப்பு நடத்தினோம். இதனால் படக்குழுவினர் நடிகர்கள் பல விபத்துகளையும், திகிலான பல அனுபவங்களையும் சந்தித்தனர். சுமார் 55 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிவடைந்துள்ளது. படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த முகமறியான் திரைப்படம் மக்களுக்கு பொதுவாக காதலர்களின் உணர்வுகளை உணர்வுபூர்வமாக உணர்த்தும் கதையாக அமைத்துள்ளேன். காதல் ஏமாற்றங்களை சந்திக்கும் பொழுது அந்த வழிகளை உணரும் இதயங்களில் கண்ணீர் துளிகளை கதைகளமாக்கி இருக்கிறேன். படத்தின் பாடல்கள் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேவா…
மாமனிதன் படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பெற்றுள்ளார். யுவன் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம். துணை வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தை இயக்கிய சீனு ராமசாமி அவரது வழிகாட்டியாக கருதப்பட்டு அவருடன் தொடர்ந்து படங்களில் பணியாற்றுகிறார். விஜய் சேதுபதி பின்னர் சீனுராமசாமியுடன் பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமனிதன். தர்மதுரை வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி, காயத்ரி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு முதன்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இசையமைத்துள்ளனர். இப்படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது YSR FILMS PVT LTDயின் கீழ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் தமிழ் மற்றும் கேரளா திரையரங்கு விநியோக உரிமையை தர்மதுரை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வாங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படம் 2022 மே…
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான ஜாங்கிட் தமிழக டி.ஜி.பி யாக இருந்தவர். இவரது பணி பாராட்டுக்குரியது. குற்றவாளிகளை பிடிப்பதிலும், குற்றங்களை தடுப்பதிலும் முனைப்பாக செயல்பட்டவர். பவாரியா கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க திறம்பட செயல்பட்டவர். இந்த வழக்கின் மூலம் தேசிய அளவில் பிரபலமானார். இந்த சம்பவத்தின் பின்னணி திரைப்படம் தான் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று. தற்போது ஜாங்கிட் நடிகராக அறிமுகமாகிறார். விஜய் சேதுபதி திரைக்கதை வசனம் எழுதியுள்ள படம் குலசாமி. இதில் விமல் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். இப்படத்தை நகைச்சுவை நடிகர் சரவண ஷக்தி இயக்குகிறார். இதிலும் போலீஸ் அதிகாரியாகவே வலம் வருகிறார் ஜாங்கிட். சமீபத்தில் குலசாமி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. ஜாங்கிட் இதை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இத்திரைப்படத்தில் நடிப்பது குறித்தும் தெரிவித்துள்ளார். By: Hari
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் இவர் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் வெளியாகி அங்கேயும் ரசிகர்களைக் கவர்ந்தது. அதையடுத்து இப்போது முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் நேரடியாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி நடித்து, சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படம் ஜதி ரத்னலு. இந்த படத்தின் இயக்குனர் அனுதீப் கே.வி தான் தற்போது சிவகார்த்திகேயனின் 20ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க…
பீஸ்ட்டின் இரண்டாவது தனிப்பாடலுக்கு ஜாலி ஓ ஜிம்கானா என்று தலைப்பிடப் பட்டுள்ளதாகவும், ட்ராபிகல் வைபை எண்ணை பீஸ்ட் ஹீரோ விஜய் பாடுவதாகவும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜாலி ஓ ஜிம்கானாவின் ப்ரோமோவில் இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே ஆகியோரும் காணப்படுகின்றனர். பாடல் முழுமையாக மார்ச் 19, 2022, சனிக்கிழமை அன்று வெளியாகிறது. இயக்குனர் நெல்சனின் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் எண்டர்டெய்னரான ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘ஜாலிஓஜிம்கானா’வின் அறிவிப்பு வீடியோ, யூடியூப்பில் வெளியான 19 நிமிடங்களில் 1.8 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்த இந்த பெப்பி பாடலுக்கு தளபதி விஜய் குரல் கொடுத்துள்ளார். பாடல் வரிகள் கு. கார்த்திக். இந்த ஆண்டின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ், ட்விட்டரில் அறிவிப்பை வெளியிட்டது. அதில், “ஜாலி ஆ இருங்க நண்பா! #BeastSecondSingle – #JollyOGymkhana பாடிய தளபதி @நடிகர்விஜய் மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இயக்குனர் நெல்சன்,…
சிம்பு நடிக்கும் கொரோனா குமார் திரைப்படத்தில், விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார். முன்னர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இப்படத்தை கோகுல் இயக்கினார். இப்படத்தின் இரண்டாம் பாகமாக கொரோனா குமார் உருவாகிறது. இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட கேரக்டர் இப்படத்தில் தொடர்ச்சியாக இடம் பெறுவதால், ஒரு சில காட்சிகளுக்காக கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதற்கு முன் செக்க சிவந்தது வானம் திரைப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. By: Hari
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு தற்காலிகமாக ‘தலைவர் 169’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த் ஜோடியாக ‘தலைவர் 169′ படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் பச்சனை அணுகியதாக செய்திகள் வெளியாகின. தற்போது, ’டாக்டர்’ பட நடிகை பிரியங்கா மோகனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து பணியாற்றியவர் நடிகை பிரியங்கா மோகன். தலைவர் 169ல் சூப்பர் ஸ்டாரின் மகளாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் கூறுகின்றன. இந்த நடிகை சமீபத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியான பிறகு, இந்த படத்தின் நடிகர்கள்…
ராஜ்கமல் இன்டெர்னேஷனல் நிறுவனம் சார்பில் கமல் தயாரித்துள்ள படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி, ஷிவாணி, பகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ளனர். “நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் விக்ரம், உலகின் சிறந்த திரையரங்குகளில் ஜூன் 3ம் தேதி வெளியாகும்” என ட்வீட் செய்துள்ளார். Watch the Vikram glimpse video here: https://www.youtube.com/watch?v=jJf35tEkW9E By: Hari